இன்பருட்டியில் சடலம்: தமிழ்நாட்டு மீனவருடையதா?

14 0

யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

ஆனால், குறித்த உடலம் இந்தியா இராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 6ஆம் திகதி நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் ஆரோக்கிய கிங் என்பவரது உடலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தமிழ்நாடு தகவல்கள் வெளியாகியுள்ளன