ஜேர்மனி அரசு, எல்லையிலேயே திருப்பி அனுப்பிய புகலிடக்கோரிக்கையாளர்களில் 1,600 பேர் மீண்டும் ஜேர்மனியில் புகலிடம் கோரியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனி சமீபத்தில் கடுமையான புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. புகலிடக்கோரிக்கையாளர்களை எல்லையிலேயே திருப்பி அனுப்புவதும் அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
ஆனால், அப்படி திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் மீண்டும் புகலிடம் கோரிவருவதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவ்வகையில், மே மாதம் 7ஆம் திகதிக்கும் அக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்கும் இடையில், திருப்பி அனுப்பப்பட்டவர்களில் சுமார் 1,600 பேர் மீண்டும் ஜேர்மனியில் புகலிடம் கோரியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

