கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர் : அயல்வீட்டில் ஏற்பட்ட மோதல்

14 0

புத்தளம், மாரவில பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மாரவில பொலிஸ் பிரிவின் டங்கன்னாவ பகுதியில் நேற்று மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர் டங்கன்னாவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராகும்.அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றம் தொடர்பாக 43 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்