மகளை வன்புணர்ந்த தந்தைக்கு 45 வருடங்கள் சிறை

18 0

மூன்று முறை கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு காலி மேல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம, ஒவ்வொரு குற்றத்திற்கும் 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையுடன் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்டவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடும் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராதம் செலுத்தப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மேலும் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனையும், இழப்பீடு செலுத்தப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மேலும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.