திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் தனி நீதிபதி அதிகார வரம்பை மீறி அவசர அவசரமாக விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் என அரசுத் தரப்பின் இறுதி வாதத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த 26 மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் கடந்த 5 நாட்களாக நடந்தது.
இன்றைய விசாரணையின்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் வாதிடுகையில், “தெளிவான, உறுதியான ஆவணங்கள், ஆதாரங்கள் இல்லாமல் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். கோயிலில் பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் வழக்கத்தை மாற்ற தனி நீதிபதி உத்தரவிட்டது சட்டப்படி செல்லுமா என்பதே வழக்கின் மையக்கேள்வியாக உள்ளது.

