முதலையை கொன்று இறைச்சியாக்க முயன்ற இருவர் களுத்துறை – பயாகலை பிரதேசத்தில் வைத்து வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (16) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் உபுல்வெஹெர பிரதேசத்தில் வசிக்கும் 27 மற்றும் 40 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடமிருந்து கொலைசெய்யப்பட்ட முதலையும் கூரிய ஆயுதமும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்களை இன்று புதன்கிழமை (17) கெக்கிராவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

