பாதிக்கப்பட்ட சிறுவர்களின் படங்களை பகிரவேண்டாம்!

5 0

தற்போது நிலவும் பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் அல்லது தனிப்பட்ட விபரங்களை சமூக ஊடகங்கள் அல்லது முக்கிய ஊடக தளங்கள் மூலம் பகிர்வதைத் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சகம் பொதுமக்களையும் ஊடக நிறுவனங்களையும் இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளது.அத்தகைய தகவல்களைப் பகிர்வது பாதிக்கப்பட்ட சிறுவர்களின் அடையாளம் மற்றும் தனியுரிமையை கடுமையாக பாதிக்கக்கூடும் செய்யக்கூடும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், அவர்களின் விபரங்கள் மற்றும் படங்கள் கடத்தல்காரர்கள் மற்றும் சட்டவிரோத நோக்கங்களுக்காக அவற்றைத் தவறாகப் பயன்படுத்தும் பிற குற்றவியல் நபர்களின் கைகளில் சிக்குவதற்கு வழிவகுக்கும் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இந்தநிலையில் சிறுவர் சுரண்டல் மற்றும் கடத்தல் உள்ளிட்ட செயல்களுக்கு இதுபோன்ற தகவல்களைப் பயன்படுத்தும் அல்லது பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.

இதேவேளை குறித்த விடயத்தில் இடம்பெறும் மீறல் சம்பவங்கள் தொடர்பான எந்தவொரு தகவலையும் 1929 என்ற சிறுவர் உதவி மைய சேவைக்கோ அல்லது அருகிலுள்ள பிரதேச செயலக அலுவலகத்தில் இணைக்கப்பட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அதிகாரி அல்லது சிறுவர் பாதுகாப்பு அதிகாரிக்கோ தெரிவிக்குமாறு அமைச்சகம் பொதுமக்களைக் கோரியுள்ளது.