எஸ்ஐஆர் பணி வெளிப்படை தன்மைக்கு பார்வையாளரை நியமிக்க அதிமுக கோரிக்கை

25 0

சென்னை மாவட்​டத்​தில் நடை​பெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் தொடர்​பாக, அனைத்து அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிகளு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம் ரிப்​பன் மாளிகையில் நேற்று நடை​பெற்​றது.

மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் தலைமையில் நடை​பெற்ற அரசி​யல் கட்சி பிர​தி​நி​தி​கள் பலர் இதில் பங்கேற்றனர்.

கூட்​டத்​தின் முடி​வில் அதி​முக சார்​பில் பங்​கேற்ற முன்​னாள் அமைச்​சர் டி.ஜெயக்​கு​மார் செய்தியாளர்களிடம் கூறிய​தாவது: முறை​யான கல்​வித் தகுதி இல்​லாத தூய்​மைப் பணி​யாளர்​கள், கொசு மருந்து தெளிப்​பவர்​கள்பிஎல்​ஓக்​களாக நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இவர்​களால் படிவங்​களை சரி​பார்க்க முடி​யாது. இறந்​தவர்​களின் வாக்​கு​களை​யும், கள்ள வாக்​கு​களை​யும் நம்​பியே திமுக இருக்​கிறது. அதனால்​தான் எஸ்​ஐஆர்-ஐ செயல்​படுத்த விடா​மல் திமுக தடுக்​கிறது.

எஸ்​ஐஆர் பணி தொடர்​பாக ஆட்​டோக்​கள் மூல​மாக விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும். எஸ்​ஐஆர் படிவத்தை பதிவேற்​றம் செய்யும் சர்​வரின் வேகத்தை அதி​கரிக்க வேண்​டும். படிவங்​கள் அனைத்​தை​யும் பிஎல்​ஓக்​கள் தான் வாங்க வேண்​டும்.

விதி​மீறலில் ஈடு​படும் அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். வெளிப்​படைத் தன்​மை​யுடன் எஸ்​ஐஆர் பணி நடை​பெறு​வதை உறுதி செய்ய தேர்​தல் ஆணைய பார்​வை​யாளரை நியமிக்க வேண்​டும் என்று இந்த கூட்​டத்​தில் வலி​யுறுத்தி இருக்​கிறோம்​ என்றார்.