அநுராதபுரம் திஸா வாவியில் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை

38 0

அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்மத்த பகுதியிலுள்ள திஸா வாவியில் சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பான முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை எனவும், சடலம் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பே குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.அநுராதபுரம் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.