தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான டில்வின் சில்வா லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அதன் பொருட்டாக ஒரு கூட்டம், ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிலையில், டில்வின் சில்வாவுக்கு எதிராக தமிழர்கள் நூற்று கணக்கில் கூடி போராட்டம் நடத்தினார்கள்.
அந்த போராட்டத்தையும் மீறி டில்வின் சில்வா கூட்டத்திற்குள் நுழைய முற்பட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது, அவர் உள்ளே சென்றுள்ள நிலையில் அங்கிருந்த தமிழர்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த இடத்தில் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

