5 கிலோகிராம் கொக்கைனை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மலேசிய நாட்டவர் என்றும் அவர் அபுதாபியில் இருந்து நாட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரின் வசம் இருந்த போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் ரூ. 250 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

