யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து காரைநகருக்கு பஸ் சேவை ஆரம்பம்

22 0

யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து  காரைநகருக்கு  இலங்கை போக்குவரத்து சபையின்   பஸ் போக்குவரத்து  சேவை  திங்கட்கிழமை (24) முதல் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில்   அதிகாலை 5.00 மணிக்கும் மாலை 7:00 மணிக்கும் ஆகிய இரண்டு நேரம்  இ.போ.ச பஸ் சேவை நடைபெறவுள்ளது.

பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்  இபோச முகாமையாளர் ,வடக்கு மாகாண ஆளுநர் , புகையிரத நிலைய அதிபர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலுக்கு அமைவாக இந்த சேவை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.