தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: ஜி20 மாநாட்டில் பங்கேற்பு

27 0

ஜி20 உச்சி மாநாட்​டில் பங்​கேற்க தென்​னாப்​பிரிக்​கா​வின் ஜோகன்​னஸ்​பர்க் நகருக்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜி20 அமைப்​பில் அமெரிக்​கா, ரஷ்​யா, ஐரோப்​பிய ஒன்​றி​யம், இங்​கிலாந்​து, ஜெர்​மனி, பிரான்​ஸ், ஜப்​பான், சீனா, இந்​தி​யா, கனடா, துருக்​கி, தென்​னாப்​பிரிக்​கா, சவுதி அரேபி​யா, தென்​கொரி​யா, மெக்​சிகோ, இத்​தாலி, இந்​தோ​னேசி​யா, பிரேசில், ஆஸ்​திரேலி​யா, அர்​ஜென்​டினா ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன.

இந்த ஆண்டு ஜி20 அமைப்​புக்கு தென்​னாப்​பிரிக்கா தலைமை வகிக்​கிறது. இதன்​படி அந்த நாட்​டின் ஜோகன்​னஸ்​பர்க் நகரில் இன்று ஜி20 உச்சி மாநாடு தொடங்​கு​கிறது. இதில் பங்​கேற்க பிரதமர் மோடி நேற்று டெல்​லி​யில் இருந்து விமானத்​தில் ஜோகன்​னஸ்​பர்க் நகருக்கு சென்​றார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையொட்டி அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஆப்​பிரிக்​கா​வில் நடை​பெறும் முதல் ஜி20 உச்​சி​மா​நாடு இது என்​ப​தால் சிறப்​புமிக்க உச்​சி​மா​நா​டாக இருக்​கும். கடந்த 2023-ம் ஆண்​டில் ஜி20 அமைப்​புக்கு இந்​தியா தலைமை வகித்​தது. அப்​போது ஆப்​பிரிக்க ஒன்​றி​யம் ஜி20 அமைப்​பில் உறுப்​பின​ராக இணைக்​கப்​பட்​டது.

தற்​போதைய உச்சி மாநாட்​டில் உலகளா​விய பிரச்​சினை​கள் குறித்து விரி​வாக விவா​திக்​கப்​படும். இந்த ஆண்டு ஜி20 உச்சி மாநாட்​டின் கருப்​பொருள் ‘ஒற்​றுமை, சமத்​து​வம் மற்​றும் நிலைத்​தன்​மை’ ஆகும். ‘ஒரே பூமி, ஒரே குடும்​பம், ஒரே எதிர்​காலம்’ என்ற இந்​தி​யா​வின் தொலைநோக்​குப் பார்​வையை மாநாட்​டில் எடுத்​துரைப்​பேன்.

மாநாட்​டில் பங்​கேற்​கும் பிற நாடு​களின் தலை​வர்​களு​டன் முக்​கிய ஆலோ​சனை நடத்த உள்​ளேன். மாநாட்​டின் ஒரு பகு​தி​யாக 6-வது இந்​தி​யா -பிரேசில்​-தென்​னாப்​பிரிக்கா (ஐபிஎஸ்ஏ) உச்சி மாநாட்​டில் பங்​கேற்​கிறேன்.

தென்​னாப்​பிரிக்​கா​வில் வசிக்​கும் இந்​திய வம்​சாவளி​யினரை​யும் சந்​தித்​துப் பேசுவேன். இவ்​வாறு பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார். வெள்​ளை​யின மக்​களை தென்​னாப்​பிரிக்க அரசு கொடுமைப்​படுத்​து​வ​தாக கூறி அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜி20 மாநாட்டை புறக்​கணித்​துள்​ளார்.