அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அசிட் வீச்சில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (20) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியில், தாய் ஒருவரும் அவரது 16 வயது பிள்ளையும் அசிட் வீச்சில் பலத்த காயமடைந்துள்ளதாக அயகம பொலிஸாருக்கு நேற்று (20) இரவு தகவலொன்று கிடைத்துள்ளது.
அதற்கமைய, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், குறித்த தாயையும் பிள்ளையையும் அயகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதன்போது குறித்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கொழும்பு – கவரகிரிய பகுதியை சேர்ந்த 40 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறினால், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களைக் கைதுசெய்ய அயகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

