திமுக அரசின் பொய் தொழில் முதலீடுகள்: ஆவண புத்தகத்தை வெளியிட்டார் அன்புமணி

24 0

பாமக சார்​பில், திமுக ஆட்சி​யின் தொழில் முதலீடு​கள் குறித்த உண்மை நிலை என்ன என்​பதை விளக்​கும் வகை​யில் ஆவண புத்​தகம் வெளி​யீட்டு நிகழ்ச்சி எழும்​பூரில் நேற்று நடந்​தது. இந்​நிகழ்ச்​சிக்கு பாமக தலை​வர் அன்​புமணி தலைமை தாங்​கி, ‘தி​முக அரசின் பொய் தொழில் முதலீடு​கள்’ என்ற ஆவண புத்​தகத்தை வெளி​யிட்​டார்.

இந்​நிகழ்ச்​சி​யில் அன்​புமணி பேசி​ய​தாவது: தமிழகத்​தில் ரூ.11 லட்​சத்து 32 ஆயிரம் கோடி தொழில் முதலீடு​கள் நடந்​திருக்​கிறது என்​றும், அதன்​மூலம் 34 லட்​சம் பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைத்​திருக்​கிறது என்​றும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், தொழில்​துறை அமைச்​சர், நிதி​யமைச்​சர் ஆகியோர் தொடர்ந்து ஒரு பொய்​யைச் சொல்லி வரு​கிறார்​கள்.

அது பொய் என்று இந்த ஆவணம் மூலம் நிரூபித்​திருக்​கிறோம். குறிப்​பாக, 2025 செப்​டம்​பர் மாதம் வரை ரூ.11,32,575 கோடி​யில் 1,059 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​திடப்​பட்​ட​தாக​வும், இதன்​மூலம், 34,02,998 வேலை​வாய்ப்​பு​கள் கிடைக்​கும் என அரசு தரப்​பில் கூறப்​படுள்​ளது. அதாவது, 2021-22-ம் ஆண்​டில் ரூ.68,405 கோடி மதிப்​பீட்​டில் 130 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​திடப்​பட்​டன.

அவற்​றில் ரூ.10,000 கோடி மட்​டுமே முதலீடு​கள்வந்​திருப்​ப​தாக உத்​தேச​மாக கணக்​கிடப்​பட்​டுள்​ளது. அதே​போல், 2022-23-ம் நிதி​யாண்​டில் ரூ.1.67 லட்​சம் கோடி​யில் 86 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தான நிலை​யில், ரூ.7 ஆயிரம் கோடிக்​கும் குறை​வாகவே முதலீடு​கள் வந்​துள்​ளன.

2024 ஜனவரி​யில் சென்​னை​யில் நடந்த உலக முதலீட்​டாளர்​கள் மாநாட்​டில் ரூ.6,64,180 கோடி மதிப்​பீட்​டில் 631 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் போடப்​பட்​டன. ஆனால், இதில் 600-க்​கும் மேற்​பட்ட நிறு​வனங்​கள் இது​வரை முதலீடு செய்​ய​வில்​லை.

மேலும், 2024-25-ம் ஆண்​டில் ரூ.39,549 கோடிக்கு புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் போடப்​பட்​டு, இது​வரை ஒன்​றுகூட செயல்​பாட்டுக்கு வரவில்​லை. 2025 ஏப்​ரல் முதல் தற்​போது​வரை ரூ.1.18 லட்​சம் கோடிக்கு 166 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெ ழுத்​தாகி உள்​ளன. இதில் ஒன்​றுகூட செயல்​வடிவம் பெற​வில்​லை.

முதல்​வர் ஸ்டா​லின் 7 நாடு​களுக்​குப் பயணம் மேற்​கொண்​டு, ரூ.34,014 கோடிக்கு 66 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​களில் கையெழுத்​திட்​டார். ஆனால், இது​வரை ஒரு பைசா முதலீடு​கூட வரவில்​லை. தமிழகத்​தில் கங்​கை​கொண்​டானில் தொழில் தொடங்க கையெழுத்​திட்ட நிறு​வனம் ஒருசில நாட்​களில் ஆந்​தி​ரா​வுக்​குச் சென்​றது ஏன்? அமெரிக்​கா​வின் கூகுள் நிறு​வன தலைமை செயல் அதி​காரி சுந்​தர் பிச்சை தமிழகத்​தைச் சேர்ந்​தவர். அந்த நிறுவனம் தமிழகத்​தில் முதலீடு செய்​யாமல், ஆந்​தி​ரா​வுக்​குச் சென்​றது ஏன்? எல்​லா​வற்​றுக்​கும் ஊழல்​தான் காரணம். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.