அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஜி.கே.வாசன் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது, அங்கிருந்த கட்சியினரை தவிர்த்து விட்டு இருவர் மட்டும் சுமார் 45 நிமிடங்கள் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா-வுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டி பழனிசாமியிடம் ஜி.கே.வாசன் வலியுறுத்தியதாக தகவல் கசிந்துள்ளது.

