வரவுசெலவுக்குஆதரவாக வாக்களித்ததால் அரசாங்கத்தின் பக்கம் மாறுவதற்கு நாங்கள் தயாராக இல்லை

18 0

2026 வரவு செலவுத் திட்டத்தில் இரண்டாம் நிலை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த காரணம் தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மை என்பதால் ஆனால் வாக்குறுதியளிக்கப்பட்டபடி ஊதியம் அதிகரிக்கப்படாவிட்டால், அதையும் எதிர்ப்போம்  என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் உள்ள தனது அலுவலகத்தில் சனிக்கிழமை (15) சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த வேலுசாமி ராதாகிருஷ்ணன்,

பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற வகையில் 2026 வரவு செலவு திட்ட இரண்டாவது நிலை வாசிப்பில் ஆதரவாக வாக்களித்தோம்.

தற்போதைய அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி ஊதியத்தை அதிகரிக்கவில்லை என்றால் அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்.

கட்சி அல்லது எதிர்க்கட்சியைப் பொருட்படுத்தாமல் அரசாங்கம் கொண்டு வந்த நல்ல திட்டங்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.

2026 ஆம் ஆண்டுக்கான தமிழ் முற்போக்கு கூட்டணியின் வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு  ரூ.400 சம்பள உயர்வை வழங்கும் என கூறுவதால் அதற்கு ஆதரவாக வாக்களித்தோம்.

ஏதாவது ஒரு காரணத்திற்காக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால், தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது.

வரவுசெலவுக்குஆதரவாக வாக்களித்ததால் அரசாங்கத்தின் பக்கம் மாறுவதற்கு நாங்கள் தயாராக இல்லை. பொதுமக்கள் இந்த திட்டத்தை எதிர்த்தவர்களையே தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

பொதுமக்களின் சார்பாக அரசாங்கம் முன்வைக்கும் எந்தவொரு நல்ல திட்டத்தையும் நாங்கள் ஒருபோதும் எதிர்க்க மாட்டோம். பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் இடத்தில் நாங்கள் எப்போதும் நிற்போம்.

பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக ஐக்கிய மக்கள் சக்தி எம் மீது எந்த வெறுப்பும் இல்லை.  ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் ரீதியாக முன்னேறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது என்றார்.