மஸ்கெலியா பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் தோண்டிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது மாணிக்கக்கல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், 62 வயதுடைய மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

