முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினருக்கு சொந்தமான வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை செயற்படுத்துவதற்கு தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (03) உத்தரவிட்டுள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களால் இந்த மூன்று மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் இன்று திங்கட்கிழமை (03) அழைக்கப்பட்ட போது, உயர் நீதிமன்ற நீதவான் ஜனக் டி சில்வா, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

