துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது!

20 0

வெவ்வேறு பிரதேசங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் 13 கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

மொரட்டுவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அம்பாறையில் தமன பொலிஸ் பிரிவின் ஹிங்குரான பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம்  11 ஆம் திகதி ஹிரண பிரதேசத்தில் ஒருவரை சுட்டுக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பிலும், பாணந்துறை பொலிஸ் பிரிவில் மற்றொரு நபரை சுட்டுக் கொல்ல திட்டமிட்ட சம்பவம் தொடர்பிலும் குறித்த சந்தேக நபர் தேடப்பட்டு வந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து  13 கிராம் எடையுள்ள ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  சந்தேக நபர் ஹிங்குரான பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.

இந்த விடயம் தொடர்பில் தமன மற்றும் ஹிரண பொலிஸ் நிலையங்கள் மற்றும் பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.