பத்தேகம பிரதேசபையின் உப தலைவர் மீது தாக்குதல்

39 0

பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி லியனகே  தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இனந்தெரியாத நபர் ஒருவரால் நேற்றுமுன்தினம் மாலை  இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர் தனது மனைவியுடன் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, பத்தேகம, கொடகந்த பகுதியில் வீதியை மறித்து அவர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உப தலைவர் தற்போது காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், தாக்குதல் தொடர்பில் பொத்தல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பாக பொத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.