கலென்பிந்துனுவெவ முன்னாள் சபைத்தலைவர் இலஞ்ச வழக்கில் கைது

34 0

கலென்பிந்துனுவெவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சமந்த நாமல் விஜேரத்ன, சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2011 முதல் 2016 வரை சபைத் தலைவராக பணியாற்றிய அவர், விசாரணைக்காக ஆணைக்குழுவினரால் அழைக்கப்பட்டபோதும் ஆஜராகாததால், 2023 ஆம் ஆண்டின் இல.09 இலஞ்ச ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் வெள்ளிக்கிழமை (24) கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.