ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தீவை விட்டு வெளியேறி அமெரிக்கா நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்.
ஜனாதிபதி 24 ஆம் திகதி புதன்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடத்த உள்ளார்.
ஜனாதிபதி அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களையும் சந்திக்க உள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் இந்த விஜயத்தின் போது வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் உடன் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

