கடந்த வாரம் அரிசி தொடர்பான 70 சோதனை நடவடிக்கைகளை நடத்தியதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அரிசி விற்பனை தொடர்பில் 55 சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், மேலும் அரிசி தொடர்பான 15 சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
அரிசியை மறைத்து வைத்தல், விலைகளை மறைத்தல் மற்றும் நிபந்தனைகளுடன் அரிசியை விற்பனை செய்தல் போன்ற குற்றங்கள் இதன் கீழ் அடங்குவதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
தனிப்பட்ட ரீதியான வர்த்தகர் ஒருவர் அதிக விலைக்கு அரிசியை விற்றதாகக் கண்டறியப்பட்டால், அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் முதல் 5 இலட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது 5 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதேநேரம், ஒரு தனியார் நிறுவனம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றம் 5 இலட்சம் ரூபாய் முதல் 50 இலட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என்றும், அரிசி பதுக்கல் தொடர்பான குற்றத்திற்காக குற்றம் சுமத்தப்பட்டால், அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் விதிக்கலாம் எனவும் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
மேலும், இரண்டாவது குற்றம் நடந்தால், குறைந்தபட்ச அபராதத்தின் இரு மடங்கு அபராதம் மற்றும் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

