தணமல்வில – மாத்தறை பிரதான வீதியில் லுனுகம்வெஹெர, ரணவரணாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக லுனுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து வெள்ளிக்கிழமை (12) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறையிலிருந்து தணமல்வில நோக்கிப் பயணித்த கார் ஒன்று தணமல்விலவிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த வேனுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது வேனின் சாரதியும் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் நால்வரும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக லுனுகம்வெஹெர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் லுனுகம்வெஹெர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

