குருணாகல் மாவட்டத்திற்கு விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழு!

44 0

பாதாள உலக கும்பல்களால் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்துவதற்காக குருணாகல் மாவட்டத்திற்கு விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பரிந்துரைக்கு அமைய குருணாகல் மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் இந்த விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழுவில் 15 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.