இந்திய மீனவர்கள் நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

71 0

எல்லை தாண்டி இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்களுக்கான விளக்கமறியல் ஏற்கனவே இரண்டு தடவைகள் நீடிக்கப்பட்ட நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிரான வழக்கு, இன்று (01) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அவர்களின் விளக்கமறியல் உத்தரவு, நவம்பர் 11 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது