நெதர்லாந்தில் மாவீரர் நினைவு சுமந்த மென் பந்துத் துடுப்பாட்டப் போட்டி 2025

105 0

நெதர்லாந்தில் மாவீரர் நினைவு சுமந்த மென் பந்துத் துடுப்பாட்டப் போட்டி 30.08.2025 சனிக்கிழமை உணர்வு பூர்வமாக நடைபெற்றது. காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வு தேசியக்கொடி ஏற்றம் பொதுச்சுடரேற்றல் அகவணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து. கழகங்களுக்குகிடையிலான போட்டிகள் ஆரம்பமானது. மொத்தமாக எட்டு அணிகள் களத்தில் மோதிக்கொண்டன கலந்து கொண்ட அணிகள்.

எல்லாளன் விளையாட்டுக் கழகம்
சூப்பர்கிங்ஸ் டென் ஹெல்டர் விளையாட்டுக் கழகம்
தமிழர் ஒன்றியம் விளையாட்டுக் கழகம்
தமிழ் வாரியர்ஸ் விளையாட்டுக் கழகம்
டைனமைட் விளையாட்டுக் கழகம்
ஈகிள் ஐ விளையாட்டுக் கழகம்
ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழகம்
மொக்குஸ் விளையாட்டுக் கழகம்.

இறுதியாக 2025 இன் மாவீரர் நினைவு சுமந்த மென் பந்துத் துடுப்பாட்டுப் போட்டியின் மூன்றாம் இடத்தை எல்லாளன் விளையாட்டுக் கழகம் பெற்றுக்கொண்டது. இறுதியாட்டுத்திற்கு டென் கெல்டர் விளையாட்டுக் கழகமும் ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழகமும் தகுதி பெற்றது.
இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தனர். ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழகம் தனது நான்கு பந்துப் பரிமாற்றத்தில் 46 ஓட்டங்களை குவித்தது. அதனைத் தொடர்ந்து ஓட்டக் குவிப்பை ஆரம்பித்த சுப்பர்கிங்ஸ் டென் கெல்டர் விளையாட்டுக் கழகம் 2.2 பத்துப்பரி மாற்றத்தில் 47 ஓட்டங்களைகக் குவித்து 2025 இன் மாவீரர் நினைவு சுமந்த மென் பந்துத் துடுப்பாட்டுப் போட்டியின் கோப்பையை தனதாக்கிக் கொண்டது.

இந்தத் தொடரின் ஆட்டநாயகன் விருதை சாறுகனும் (ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழகம்) சிறந்து பந்து வீச்சாளராக நியூட்டன் (சுப்பர்கிங்ஸ் டென் கெல்டர் விளையாட்டுக் கழகம்) பெற்றுக் கொண்டனர்.
அமைதியான முறையில் நடைபெற்ற இந்தச் சுற்றுப் போட்டி தேசியக் கொடி கையேந்தலுடன் எமது தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற கோசத்துடன் நிறைவுபெற்றது.