செட்டிகுளம் – சின்னசிப்பிக்குளம் பகுதியில் மாடுகள் கடத்தல்: ஒருவர் கைது

62 0

செட்டிகுளம் – சிப்பிக்குளம் பகுதியில் முறையான அனுமதி பத்திரமின்றி மாடுகளை ஏற்றி வந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் வியாழக்கிழமை (28) தெரிவித்தனர்.

வவுனியா, செட்டிகுளம், சின்னச் சிப்பிக்குளம் பகுதியில் பயணித்த பாரவூர்த்தி ஒன்றை சோதனை செய்த போது முறையான அனுமதியின்றி மாடுகள் கொண்டு செல்லப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த மாடுகள் மீட்கப்பட்டதுடன், குறித்த வாகனத்தை கைப்பற்றிய பொலிசார் அதனை செலுத்தி வந்த சாரதியையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.