இன்று (25) ஊடக சந்திப்பொன்றில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
கடந்த அரசுகள் இவற்றை முன்னெடுப்பதில் அசமந்தமாக இருந்தபோதும் இம்முறை அவற்றை அரசு நிறைவேற்றும். இது தொடர்பாக நான் அரசுடன் பேசியுள்ளேன். அதன் அடிப்படையிலேயே இதை நான் கூறுகின்றேன்.
தீவக கடற்போக்குவரத்து இன்று பெரும் சவாலாக இருக்கிறது. வீதி அபிவிருத்தி அதிகார சபை செய்யவேண்டிய விடயத்தை அது கண்டுகொள்ளாதிருப்பதால் தான் பல அனர்த்தங்கள் நிகழ்ந்தேறியுள்ளன. இவற்றை கருத்தில் கொண்டே அரசுடன் இவ்விடயம் குறித்துப் பேசி, அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

