மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!

86 0

கண்டி – கட்டுகஸ்தோட்டை வீதியில் சியம்பலாதென்ன சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (22) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியிலிருந்து கட்டுகஸ்தோட்டை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதிய விட்டு விலகில அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கண்டி – அக்குறணை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஆவார்.

இந்த விபத்து தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.