சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் போட்டிகளுக்கான பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்னாபிரிக்க அணியின் கேஷவ் மகாராஜ் முதலிடம் பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்திய நிலையில் அவர் இந்த தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 687 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளார்.
அதன்படி, இதுவரை தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இலங்கை அணியின் மகேஷ் தீக்ஸன ஒரு இடம் பின்தள்ளப்பட்ட நிலையில் 671 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஐ.சி.சி. அணியின் தரவரிசைப்படி, ஒருநாள் பந்து வீச்சாளர்களில் இந்திய அணியின் குல்தீப் யாதவ் மூன்றாவது இடத்தையும், நமீபியா அணியின் பெர்னட் ஸ்கோல்ட்ஸ் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதே பட்டியலில் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க 8வது இடத்திலும், துனித் வெல்லாலகே 32வது இடத்திலும் உள்ளனர்.

