மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, குழந்தையாக இருந்த காலத்தில் எனது மடியில் வளர்ந்த பிள்ளை என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
எழுபதுகளில் அனுருத்த ரத்வத்தே கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் உரையாற்றும் வாய்ப்பை வழங்குவதற்காக லொஹானை தனது மடியில் வைத்திருந்ததாகவும் அவர் நினைவுபடுத்தினார்.
லொஹான் ரத்வத்தையின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறினார்.

