சபரிமலை ஐயப்பன் ஆலயம் குறித்து இலங்கை எடுத்துள்ள தீர்மானம்

58 0

இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் ஆலயத்தை புனித யாத்திரைத் தலமாகப் பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீண்ட காலமாக இலங்கையின் இந்து பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை இந்தியாவின் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு யாத்திரை சென்று தரிசனம் செய்கின்றனர்.

 

தற்போது ஆண்டுதோறும் 15,000-க்கும் மேற்பட்ட இலங்கை இந்து பக்தர்கள் பங்கேற்கும் இந்த யாத்திரை முக்கியமான புனித தலமாக உள்ளது.

 

அதன்படி, கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு இலங்கை இந்து யாத்திரிகர்கள் மேற்கொள்ளும் வழிபாட்டு யாத்திரையை இலங்கை அரசு புனித யாத்திரையாகப் பிரகடனப்படுத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.