பலாங்கொடையில் வீடொன்றில் தீ விபத்து – 7 வயது சிறுவன் பரிதாப மரணம்

65 0

பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ, மஹவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று (9) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொடை பொலிஸ் அவசர தொலைபேசி எண்ணுக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுவனின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சம்வத்தின் போது உயிரிழந்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை வீட்டில் இருந்ததாலும், தீ விபத்தில் அவர்களுக்கு காயம் ஏற்படாததால் இந்த மரணம் தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

குழந்தையின் தந்தை போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், குடும்ப தகராறு காரணமாக தாயும் தந்தையும் பிரிந்து வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அந்த தாய் வேறொரு நபருடன் திருமணத்திற்கு அப்பாலான உறவில் இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும், நேற்று (8) இரவு குறித்த பெண் வீடு திரும்பியபோது ஏதோ ஒரு தகராறு ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நீதவான் விசாரணைகளை பலாங்கொடை பதில் நீதவான் மேற்கொள்ளவுள்ளதோடு, சிறுவனின் சடலம் மீதான பிரேத பரிசோதனை பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது