இணையத்தளத்தின் ஊடாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் கைது!

48 0

இணையத்தளத்தின் ஊடாக  சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று திங்கட்கிழமை (04) இரவு தலங்கம, அக்குரேகொட பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது,  கணினிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு ஆண்களும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 20 கையடக்கத் தொலைபேசிககள், மூன்று மடிக்கணினிகள் மற்றும்  டேப்லெட் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர்கள் 22, 30 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும் ஆண் சந்தேக நபர்கள் 25, 26, 27 மற்றும் 29 வயதுடைய இந்தியர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.