லொறியில் மோதி உயிரிழந்த முதியவரின் சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரல்!

45 0

கொழும்பு – இரத்தினபுரி ஹைலெவல் வீதியில் லொறியில் மோதி உயிரிழந்த முதியவரின் சடலத்தை அடையாளம் காண ஹங்வெல்ல பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

கொழும்பு – இரத்தினபுரி ஹைலெவல் வீதியில் இராஜசிங்க வித்தியாலயத்திற்கு திரும்பும் சந்தியில் கடந்த ஜூலை மாதம் 05 ஆம் திகதி லொறியில் மோதி படுகாயமடைந்த முதியவர் ஒருவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஜூலை மாதம் 15  ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த முதியவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்தின்  071 – 8591425 அல்லது 036 – 2222380 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.