மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை (01) இரவு நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் புகுந்த யானை ஒன்று வீட்டின் முன்பகுதியில் வைத்து நான்கு பிள்ளைகளின் தந்தையை தாக்கியுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் படுகாயமடைந்தவரை பார்வையிட்டு அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் பணியை முன்னெடுத்துள்ளார்.
இதனையடுத்து படுகாயமடைந்தவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




