ஒலுவில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் !

64 0

ஒலுவில் அஷ்ரப் நகரில் அமைந்துள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் வியாழக்கிழமை (31) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த அக்கரைப்பற்று மாநகர சபை தீயணைப்பு பிரிவின் ஊழியர்கள், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ பரவிய நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், பிரதித் தவிசாளர் பாறுக் நஜித், திண்மக்கழிவு முகாமைத்துவ பொறுப்பாளர் எம். இர்பான், வேலைத்தள மேற்பார்வையாளர் எம்.ஏ. மனாப் மற்றும் பிற ஊழியர்கள் மற்றும் பாலமுனை இளைஞர்களும் தீயை அணைக்கும் பணியில் தங்களது பங்களிப்பை வழங்கினர்.

நள்ளிரவு நேரத்திலும் மக்களுக்காக பணியாற்றிய மாநகர சபை தீயணைப்பு பிரிவின் ஊழியர்களுக்கும்,  தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் நன்றியை தெரிவித்தனர்.