புதிய பிரதம நீதியரசர் வௌியிட்ட விடயம்

54 0
புதிய பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவை வரவேற்கும் வைபவம் இன்று (31) உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிபதிகள், உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளும் பங்கேற்றனர்.

இந்த சம்பிரதாய உத்தியோகபூர்வ நிகழ்வில் தனது உரையை வெளியிட்ட பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நீதித்துறை செயல்முறையை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

வழக்கு விசாரணையை விரைவுபடுத்தவும், நீதித்துறை அமைப்பிற்குள் பொதுமக்களுக்கு பயனுள்ள சேவைகளை வழங்கவும் நீதித்துறை செயல்முறைகளின் டிஜிட்டல் மயமாக்கல் துரிதப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.