சிறிய எலும்புத் தொகுதியை அரவணைத்தவாறு காணப்பட்ட பெரிய எலும்புத் தொகுதி!

69 0

செம்மணியில் நேற்றைய தினம் (29) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது பெரிய மனித எலும்புத் தொகுதியுடன் சிறிய குழந்தையின் மனித எலும்புத் தொகுதியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் குறித்து இன்றைய தினம் (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெரிய மனித எலும்புத் தொகுதியுடன் சிறிய எலும்பு தொகுதியானது அரவணைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

அது சுத்தப்படுத்தப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்டு இன்று காலை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது என்றார்.