பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், வலானை குற்றத் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனத்தை தன்வசம் வைத்திருந்தமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பாக அவர் தனது வழக்கறிஞருடன் சரணடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் தனுஷ்க வீரக்கொடி கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் மத்துகம பகுதியில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்ட சம்பவத்திலும் வீரக்கொடி தொடர்புடையவர் ஆவார்.
இதே சம்பவத்துடன் தொடர்புடைய பாணந்துறை வலானை குற்றவியல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

