பாணந்துறையில் ஹிரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிங்கெல்ல பிரதேசத்தில் குஷ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று புதன்கிழமை (16) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஹிரணை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 150 கிராம் ஹெரோயின் மற்றும் 92 கிராம் குஷ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹிரணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

