மிஹிந்தலையில் துப்பாக்கி, வாள், போதைப்பொருளுடன் ஒருவர் கைது

73 0

அநுராதபுரத்தில் மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பதலாகம பிரதேசத்தில் துப்பாக்கி, வாள்  மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் மிஹிந்தலை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (14) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மிஹிந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் மிஹிந்தலை  பிரதேசத்தி வசிக்கும் 43 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, வாள் மற்றும் 60 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.