உணவருந்த வீட்டுக்கு சென்ற நபர் ஒருவர் வீதியில் வாகனம் மோதி நேற்று சனிக்கிழமை (12) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நயினாதீவு 8ஆம் வட்டாரத்தை சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கோண்டாவில் டிப்போவில் பஸ் நடத்துனராக பணிபுரிந்து வருகின்றார். நயினாதீவு பகுதியைச் சேர்ந்த இவர் கோண்டாவில் பகுதியில், பணி நிமித்தம் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் உணவுக்காக துவிச்சக்கர வண்டியில் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு நோக்கி சென்றபோது, கோண்டாவில் அம்மாச்சி உணவகத்துக்கு அருகாமையில் வீதியை கடக்க முற்பட்டவேளை வீதியால் வந்த வேன் அவர் மீது மோதியதில் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

