காலி, பலப்பிட்டிய, கொஸ்கொடை சந்தியில் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கொஸ்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொஸ்கொடை சந்திக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் அஹுங்கல்லவிலிருந்து கொஸ்கொடை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் “ரன் மஹாத்தயா” என்பவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “ஷான் மல்லி” என்பவரின் தலைமையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த முச்சக்கரவண்டியின் சாரதியான “பாலே“ என்பவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூடு திட்டமிடப்பட்டதாகவும் தவறுதலாக “ரன் மஹாத்தயா” என்பவர் மீது துப்பாக்கிச் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் “ரன் மஹாத்தயா” என்பவரின் உறவினர் ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

