உயரமான பகுதிகளுக்கு பவுசர் மூலம் நீர் விநியோகம்

55 0

தற்போதைய வறட்சியான வானிலை காரணமாக உயரமான பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல்கள் இருந்தால், பவுசர்களைப் பயன்படுத்தி குடிநீர் விநியோகிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் மிகவும் வறட்சியான வானிலை காரணமாக, நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாக அதன் பிரதி பொது முகாமையாளர் வஜிரா திராணகம தெரிவித்தார்.

அதன்படி, வாகனம் கழுவுதல், தோட்டக்கலை உள்ளிட்ட அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கு குடிநீரைப் பயன்படுத்துவதைக் குறைத்து, அத்தியாவசிய அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டும் நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதி பொது முகாமையாளர், பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார்.