வட மாகாண கல்வி அமைச்சினால் கடந்த 22 வருடங்களாக பாதிக்கப்பட்ட மன்னரைச் சேர்ந்த ஆசிரியர் எச்.எம். தஸ்லீம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வை பெற்றுத்தர கோரி பிரதமருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
எச்.எம். தஸ்லீம்ஆகிய நான் 1999/11/11 திகதி கல்விச் சேவை குழுவினால் வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளில் தமிழ் மொழி மூலம் தகுதி கான் ஆசிரிய வெற்றிடங்களுக்கு (கைப்பணி ஆசிரியர்) பதவிக்கு விண்ணப்பித்தேன்.அதற்கிணங்க 2000/08/15 திகதி நேர்முகப் பரீட்சை நடைபெற்றது. சில மாதங்களின் பின் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்ட போது எனக்கு நியமனம் கிடைக்கவில்லை.
இதுபற்றி வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் வினவியபோது என்னால் சமர்பிக்கப்பட்ட தொழில்நுட்ப மரவேலை பாட சான்றிதழ் ஏற்புடையது இல்லை என கூறப்பட்டது. அதற்கு நான் மீண்டும் மேன்முறையீடு செய்தேன்.
பின்னர் சான்றிதழ் ஏற்புடைமை பற்றி வடக்கு கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர் 8/1/02/02/24 இலக்கம் 2000/05/08 திகதி கடிதம் மூலம் கல்வி செயலாளர் கல்வி உயர்கல்வி அமைச்சு அவர்களின் வழி காட்டலைக் கேட்டு கோரியிருந்தார்.
இக் கோரிக்கைக்கு அமைவாக கல்வி உயர்கல்வி அமைச்சின் ED/1/17/4/75/11 இலக்கம் 2008/03/05ம் திகதி கடிதத்தின் மூலம் தொழில் நுட்ப சான்றிதழ் ஆசிரிய நியமனத்துக்கு ஏற்றுக் கொள்ளலாம் என கல்வி உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஆனல் கல்வி உயர் கல்வி அமைச்சின் பதிலுக்கு நின்றார். மீண்டும் வட மாகாணம் இந்த நியமனம் தொடர்பான நடவடிக்கைகள் யாவும் முடிவுறுத்தப்பட்டு விட்டது என்பதை மனவருத்ததுடன் அறியத் தருகின்றேன் என NP/3/2/6/19-COMP/MN இலக்கம் 2009/05/06 திகதி கடிதம் மூலம் வடமாகாண கல்வி அமைச்சு தெரிவித்து உள்ளது.

