திமுக சேர்மனை வீட்டுக்கு அனுப்பிய திமுக… அந்த இடத்தைப் பிடிக்க ஆயத்தமாகும் அதிமுக! – மாவட்டச் செயலாளர் பதவிக்கும் ஆபத்து?

32 0

முன்பு நாம் எழுதி இருந்தபடியே சங்கரன்கோவில் திமுக நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரிக்கு எதிராக திமுக கவுனசிலர்களுடன் கூட்டணி போட்டு அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது கடந்த 2-ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானம் வெற்றிபெற்று உமா மகேஸ்வரி தனது பதவியை இழந்திருக்கிறார்.

மொத்​தம் 30 வார்​டு​களைக் கொண்ட சங்​கரன்​கோ​வில் நகராட்​சி​யில் திமுக வென்​றது 9 வார்​டு​களை மட்​டும் தான். 12 வார்​டு​களை அதி​முக வென்​றிருந்​தது. எஞ்​சிய வார்​டு​களை கூட்​ட​ணிக் கட்​சிகளும் சுயேச்​சைகளும் கைப்​பற்​றினர். இதனால் சேர்​மன் தேர்​தலில் திமுக-​வும் அதி​முக-​வும் தலா 15 வாக்​கு​களைப் பெற்​றன. இதையடுத்து நடந்த அதிர்​ஷ்ட குலுக்​கலில் திமுக-​வின் உமா மகேஸ்​வரி சேர்​ம​னா​னார். அதேசம​யம், அதி​முக-வைச் சேர்ந்த கண்​ணன் (எ) ராஜு 16 வாக்​கு​களைப் பெற்று திமுக-வை தோற்​கடித்து வைஸ் சேர்​ம​னா​னார்.

இந்த நிலை​யில், 2023-ல் திமுக-வுடன் கூட்​டணி போட்டு உமா மகேஸ்​வரிக்கு எதி​ராக அதி​முக கவுன்​சிலர்​கள் நம்​பிக்கை இல்லா தீர்​மானத்​தைத் தாக்​கல் செய்​தனர். ஆனால், அப்​போது அந்​தத் தீர்​மானம் வாக்​கெடுப்​புக்கே வரா​மல் திமுக தலை​மை​யால் சரிக்​கட்​டப்​பட்​டது. அதன் பிறகும் உமா மகேஸ்​வரி​யின் போக்கு மாறாத​தால் மீண்​டும் கடந்த ஜூன் 2-ம் தேதி பழையபடி​யும் அதி​முக-​வினரே நம்​பிக்கை இல்லா தீர்​மானத்தை தாக்​கல் செய்​தனர். கடந்த 2-ம் தேதி இதன் மீது நடந்த வாக்​கெடுப்​பில் தான் உமா மகேஸ்​வரி பதவி இழந்​திருக்​கி​றார்.

இதனிடையே, அதிருப்தி திமுக கவுன்​சிலர்​களை சமா​தானப்​படுத்தி நம்​பிக்கை இல்லா தீர்​மானத்தை நீர்த்​துப் போகச் செய்​யும் பொறுப்பை தென்​காசி வடக்கு மாவட்ட திமுக செய​லா​ளர் ராஜா எம்​எல்​ஏ-​விடம் திமுக தலைமை ஒப்​படைத்​த​தாகச் சொல்​கி​றார்​கள். ஆனால், உமா மகேஸ்​வரி மீது ராஜாவுக்கே நல்ல அபிப்​பி​ரா​யம் இல்​லாத​தால் அவர் இந்த விவ​காரத்​தில் பெரி​தாக எந்த முயற்​சி​யும் எடுக்​க​வில்லை என்​கி​றார்​கள். இதைத் தெரிந்து கொண்டு தான் திமுக கவுன்​சிலர்​களும் அதி​முக-வுடன் துணிச்​சலாக கைகோத்து உமா மகேஸ்​வரியை வீட்​டுக்கு அனுப்பி இருக்​கி​றார்​கள்.

இதுகுறித்து மாவட்​டச் செய​லா​ளர் ராஜா​விடம் கேட்​டதற்​கு, “உமா மகேஸ்​வரி தனது பதவியை இழந்​ததற்கு நான் காரணமல்ல. அவரையே பதவி​யில் நீடிக்​கச் செய்ய திமுக தலைமை என்​னிடம் எந்​தப் பொறுப்​பை​யும் ஒப்​படைக்​க​வில்​லை. நிர்​வாகத்​தில் குளறு​படி, வளர்ச்சி திட்​டங்​களை செயல்​படுத்த நடவடிக்கை எடுக்​காமல் இருந்​தது போன்ற காரணங்​களால் கவுன்​சிலர்​களிடம் அதிருப்​தியை சம்​பா​தித்​தார். அதனால் கவுன்​சிலர்​களின் நம்​பிக்​கையை இழந்து பதவியை இழந்​துள்​ளார். இதனால் திமுக-வுக்கு எந்​தப் பாதிப்​பும் இல்​லை. திறமையற்ற நிர்​வாகம் செய்​தால்​தான் திமுக-வுக்கு பாதிப்​பாக அமை​யும். அடுத்​த​தாக தலை​வர் பதவிக்கு யார் போட்​டி​யிடு​வது என்​பது குறித்து கவுன்​சிலர்​கள் முடிவு செய்​து, தலை​மைக்கு தெரி​விப்​பார்​கள். தலை​மை​யால் அறிவிக்​கப்​படு​பவர் போட்​டி​யிடு​வார்” என்​றார்.

இதுகுறித்து தென்​காசி வடக்கு மாவட்ட அதி​முக செய​லா​ளர் கிருஷ்ண​முரளி எம்​எல்ஏ நம்​மிடம், “சேர்​மன் சரி​யாக செயல்​ப​டாத​தால் அதி​முக நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கொண்​டு​வந்​தது. எங்​களுக்கு ஆதர​வாக திமுக கவுன்​சிலர்​களும் சேர்ந்து வாக்​களித்​து, தீர்​மானத்தை வெற்​றி​பெறச் செய்​தனர். அதி​முக-​வின் பலம் முன்பு 12 ஆக இருந்​தது.

ஒரு சுயேச்சை கவுன்​சிலர் அதி​முக-​வில் சேர்ந்​த​தால் தற்​போது எங்​கள் பலம் 13 ஆக உயர்ந்​துள்​ளது. இன்​னும் 3 பேர் ஆதரவு கிடைத்​தால் நகராட்சி தலை​வர் பதவியை அதி​முக கைப்​பற்​றும் நிலை உள்​ளது. பதவியை இழந்த உமா மகேஸ்​வரி வாக்​கெடுப்​பில் பங்​கேற்​பா​ரா… எங்​களுக்கு வாக்​களிப்​பாரா என்று தெரி​யாது. இப்​போதுள்ள சூழலில் தலை​வர் பதவியை கைப்​பற்ற எங்​களுக்கு நிறையவே சான்ஸ் இருக்​கு” என்​றார்.

அடுத்த தலை​வ​ருக்​கான ரேஸில் திமுக தரப்​பில் புனி​தா, முத்​து​மாரி, கவுசல்யா ஆகி​யோரின் பெயர்​கள் அடிபட்​டாலும் 60 லகரத்​தைக் கட்​டிக்​கொண்டு கவுசல்யா முன்​னணி​யில் இருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள். போட்​டிக்கு அதி​முக-​வும் கோதா​வில் குதிப்​ப​தால் சங்​கரன்​கோ​வில் நகராட்சி கவுன்​சிலர்​கள் காட்​டில் மழை தான். அதேசம​யம், இந்​த​முறை திமுக தோற்​றுப் போனால் ராஜா​வின் மாவட்​டச் செய​லா​ளர் பதவிக்கே ஆபத்து வரலாம் என திமுக தரப்​பில் சிலர் குடு​குடுப்பை ஆட்​டுகிறார்​கள்.