கல்கிஸ்ஸை கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் கல்கிஸ்ஸை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்றுள்ளது.
ஈரியகொல்ல, யக்வில பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று, இளைஞன் கல்கிஸ்ஸை கடலில் நீராடிக் கொண்டிருந்த போது திடீரென கடலில் மூழ்கியுள்ளனர்.
இதனை அவதானித்த கல்கிஸ்ஸை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் இளைஞனை காப்பாற்றி கரைக்குக் கொண்டு சென்று அவருக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

